சங்கரா கல்லூரியில் “உயர்கல்வியில் தரமேன்பாடுகள்” குறித்த தேசியக் கருத்தரங்கு

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று தேசிய தரமதிப்பீட்டு அங்கீகாரக் குழுவின் நிதிநல்கையுடன் கல்லூரியின் உள்தர உறுதிக் குழுவின் சார்பில் “உயர்கல்வியில் தரமேன்பாடுகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வனிதா கருத்தரங்கினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவரது உரையில் உலகத்தரத்தை அடைய கடைப்பிடிக்க வேண்டிய மாறுதல்கள் குறித்து பேசினார்.



கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. முதல் அமர்வில் காந்திகிராம பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் உயர்கல்வியில் தர மதிப்பீடுகள் என்னும் தலைப்பில் ஒளிப்படக்காட்சிகள் மூலம் விளக்கினார். அவரது உரையில் தகுதி வாய்ந்த மனித வள ஆதாரங்களை உருவாக்குவதில் ஆய்வுப்பணியில் பயிற்சிகள், ஆசிரியர் தொழிலில் நிர்வாகத் தேவைகள் மற்றும் தகுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்குதலின் தேவைகளை எடுத்துரைத்தார்.



இரண்டாம் அமர்வில் காந்திகிராம பல்கலைக்கழகக் கணினிப் பயன்பாட்டுத் துறைத்தலைவர் சண்முகவடிவு உயர்கல்வி நிறுவனங்களில் தரமதிப்பீட்டு அளவீடுகள் என்னும் தலைப்பில் ஒளிப்படக்காட்சிகள் மூலம் உரையாற்றினார். அவரது உரையில் புதிய கல்விக் கொள்கை, வகுப்பறையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விளக்கமாக கூறினார்.



மூன்றாம் அமர்வில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராதிகா கற்றல் கற்பித்தலில் தர மேன்பாடுகள் குறித்து சிறப்பான விளக்கவுரை நிகழ்த்தினார். 



இக்கருத்தரங்கில் கோவை, ஈரோடு, ஊட்டி, பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் IQAC ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர், கருத்தரங்கு நிரைவு நிகழ்ச்சியில் சங்கரா கல்லூரி IQAC யின் பொறுப்பாளர் உமா தேசியதரமதிப்பீட்டு அங்கீகாரக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக உரை நிகழ்த்தினார். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. நிறைவாக சங்கரா கல்லூரியின் IQACயின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு நன்றியுரை கூறினார்.



Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...