பீட்டா அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்

தமிழத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை கண்டித்து, கோவை அரசு கலைக்கல்லூரியில் அகில பாரதீய வித்யார்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பியபடி பீட்டா அமைப்பின் இந்தியாவிற்கான முதன்மை செயல் அதிகாரியான பூர்வா ஜோஸ் புராவின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டுமெனவும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதேப்போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி மைதானத்தில் திரண்ட சமூக வலைதள பதிவாளர்கள், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அப்போது முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒருங்கிணைந்து இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...