மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட குறைந்தபட்ச கூலியை வழங்கக் கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய துப்புரவாளர்களுக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஊராட்சி அமைப்புகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும். மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். நிரந்திர பணிக்கு ஆட்களை எடுக்கும்போது ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கப்படவேண்டும்.

அதேபோல துப்புரவு பணிகளில் ஈடுபடுகிற ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 300 ரூபாயை மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துமட்ட ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக ஒத்தக்கால்மண்டப பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் தராமல் நிர்வாகம் இழுத்தடித்தது. இதனை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அறிவித்த ஊதிய உயர்வோடு வழங்கப்பட்டது. 

இதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதி தொழிலாளர்கள் மற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...