ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூகவலைதளம் மூலம் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும், கோவையில் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என தெரிவித்தனர்.

மேலும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.



இதேபோல, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சட்ட திருத்தம் செய்ய முன்வராத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...