கோவை ரயில் பாதை அருகே உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கோவை ரயில் நிலைய ரயில் பாதை அருகே உள்ள கடலைக்கார சந்து 3வது வீதி இந்திரா நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 48 குடியிருப்புகளும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு வந்தபோது, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்க அடையாள அட்டைகள் அனைத்தும் வைத்திருந்தும் அந்த பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடம் வழங்காததால் வேறுவழியின்றி இருந்து வருவதாகவும், மாற்று இடம் இல்லாமல் குடும்பத்துடன் எங்கு செல்வது என்று கூறி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 15 நாட்கள் ரயில்வேயிடம் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதமும் எழுதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள 48 குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...