மத்திய அரசு அனுமதி தராவிட்டால் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என ஒன்றிணைந்த கோவை வாழ் மக்கள்


தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி தென்தமிழகத்தின் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு எனப்படும் தமிழர்களின் வீரவிளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்றாகும். மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இதைக் காண வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்துக்கு வருகை தருவர்.



இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் என்றழைக்கப்படும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.



இதைத்தொடர்ந்து, இந்த தடையை நீக்கிவிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட லட்சக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு வருடமாக நடத்தமுடியாமல் உள்ள தமிழர்களின் ஜல்லிக்கட்டை இவ்வருடன் நடத்தியே ஆக வேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, வரும் பொங்கல் தினங்களில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கோவை மக்கள் இன்று ஒன்றிணைந்துள்ளனர்.



மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவோம், பீட்டாவும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடைபிடித்து வரும் பிடிவாதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரும், முழக்கங்களை எழுப்பியவாரும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...