தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் கோவையில் இன்று துவக்கம்


கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

கோவையில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகள் இந்திய வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியானது கோவை சித்ரா பகுதியிலுள்ள தனியார் அரங்கில் இன்று துவங்கி வரும் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நாடுமுழுவதும் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 18 முதல் 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 350 ஆண்கள் மற்றும் 150 பெண்களும், 40 முதல் 70 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மொத்தம் 200 வீரர் மற்றும் வீராங்கனைகள் என 700 பேர் இந்த போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இதன் முதல் நாளான இன்று 53 கிலோ மற்றும் 59 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 66 கிலோ மற்றும் 120 கிலோ எடைப்பிரிவு என 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...