ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக முதியோர் ஆதரவற்றோர் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்!


ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை  மாநகராட்சி முதியோர் ஆதரவற்றோர் காப்பகத்தில் நேற்று 15/01/2017 பொங்கல் விழா ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக  பாரம்பரியப்படி  கோலாகலமாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பம்சமாக ஆதரவற்ற முதியோர்களுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இணைந்து இந்த பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.





விழாவில்   உரி அடித்தல் விளையாட்டு, கயிறு இழுத்தல்,  எலுமிச்சை பழம் வாயில் சுமந்து செல்லும் விளையாட்டு, போன்ற விளையாட்டுகள் முதியோர்களுக்காக நடத்தப்பட்டது. 

போட்டிகளில் வெற்றி தோல்வியென பிரிக்காமல்  போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து ஆதரவற்ற முதியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் நிகழ்ச்சியை மெருகூட்ட சாலை வழி செல்பவர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு அவர்களும் கலந்து கொண்டதும் விழா மேலும்  சிறப்படைய காரணமாக இருந்தது. மேலும் திரு தொல்காப்பியன் அவர்களின் சிலம்பாட்டமும், தடம் அமைப்பின் இசை  நிகழ்ச்சியும் இணைந்து இருந்தது. 

இந்த பொங்கல் விழா காப்பகத்தில் உள்ள  முதியவர்களுக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அடைந்தது  மட்டும் இல்லாமல் பலருக்கு இது போன்ற விழாவில் கலந்துக் கொண்டது வாழ்வில் முதன் முறையாகவும் இருந்தது.



விழாவை காண வந்த பொதுமக்கள் கூறும் பொழுது ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் ஆதரவற்றவர்களுக்கான  இந்த பொங்கல் விழாவை பார்க்கும் பொழுது மெய் சிலிர்த்து போகிறோம்.  எங்கள் வீட்டில் கூட இவ்வளவு மகிழ்ச்சியான எந்த விழாவும் நடந்தது இல்லை கண்டதும் இல்லை. பாட்டிகளின் இந்த உற்சாகமான விளையாட்டை கண்டே நாங்கள் காப்பகத்தினுள் வருவதற்கு காரணமாக இருந்தது என்றனர். 

இறுதியாக பொங்கல் வைத்து இயற்கை இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் கரும்பும் பொங்கலும் வழங்கப்பட்டது.

காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது, மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு புத்தாடைகளும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது, அத்துடன் போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைவருக்கும்  பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. 

முதியவர்களுக்காக இந்த  உதவி செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக பொங்கல் வாழ்த்துக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...