இந்தியாவில் தயாரிக்கபட்ட இலகு ரக விமானம் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என விமான படை அதிகாரி தகவல்


இந்தியாவில் தயாரிக்கபட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கப்படும்  என விமான படை அதிகாரி சுனில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.



குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக சூலூர் படை தளத்தில் விமான படை செயல்பாடுகள் குறித்த கண்காட்சி மற்றும் செயல் விளக்கம் இன்று நடைபெற்றது.

தற்போது விமான சேவையில் உள்ள இந்தியாவில் 2003-ல் தயாரிக்கபட்ட நவீன இலகு ரக எம்.கே-1 ஹெலிகாப்டர், இங்கலாந்தில் 1964ல் தயாரிக்கபட்ட ஆரோ-748 விமானம், மணிக்கு 540 கி.மீட்டர் வேகத்தில் பொருட்களை ஏற்றி செல்லுதல், பயிற்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணத்திற்கு உபயோகிக்கப்படும்  ஆண்டநோவ்-32 விமானம் மற்றும் ரஷ்யாவில் உருவாக்கபட்ட எம்.ஐ-17வி-5 ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றன.

மேலும், போர் மற்றும் கலவர காலங்களில் வீரர்கள் உபயோகிக்கும் ராப்ளிங் கயிறு, விளக்குகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கூடாரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.





இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தீவிரவாத தாக்குதலின் போது விமான படை வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்த ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி தாக்குதல் நடத்தும் செயல் விளக்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து சூலூர் விமான படை தள அதிகாரி ஏர் கமோடர் சுனில்குமார் கூறும்போது, சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய விமான படை செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கிலும் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக கூறினார்.

மேலும், இந்த கண்காட்சியில் 7000-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுவதாக கூறியவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...