கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து சட்டகல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜல்லிகட்டு விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத  மத்திய அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து  சட்டகல்லூரி மாணவர்கள்  போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிகட்டு போட்டி நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி  கோவையில் அனைத்து கல்லூரிகளை  சேர்ந்த மாணவர்களும் , இளைஞர்களும் மூன்றாவது நாளாக வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்திற்கு சென்று கலந்து கொண்டனர். 

பின்னர் 50க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  கோவை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் , ரயில் நிலையத்திற்குள் சென்று கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மத்திய அரசு ஜல்லிகட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் , பீட்டா அமைப்பினை  கொண்டு வந்ததே பா.ஜ.க அரசுதான் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

காவிரி விவகாரத்தில் ஓரு நிலைப்பாடும், ஜல்லிகட்டு விவகாரத்தில் ஓரு நிலைப்படும் எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மக்கள் விழித்துக்கொண்டார்கள் எனவும் ஜல்லிகட்டுக்கு அனுமதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை சமரசப்படுத்திய காவல் துறையினர் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்தனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் காரணமாக ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...