ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்திய கோவை மக்கள்


ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை கண்டித்து கோவை திருமலையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.



இந்நிலையில், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை திருமலையாம்பாளைய பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை பாடையில் எடுத்து சென்று செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது முதல்வர் பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.





சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மத்திய தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் புகுந்து பீட்டாவை தடை செய்யவும், மத்திய மாநில அரசுகள் அவசர சட்டத்தை கொண்டு வர வலியுறுத்திம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் போராட்டம் நடைபெற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

கோவை தொப்பம்பட்டி மற்றும் சின்னத்தடாகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீட்டா அமைப்பை தடை செய்யவும், ஜல்லிகட்டிற்கு உடனே அரசு ஆணை வழங்கவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதமிருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...