லட்சுமி விலாஸ் வங்கியின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி கண்காட்சி

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி கண்காட்சி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சியானது, அனைத்து வகையிலும் தொழில்துறையினருக்கு உதவும் வகையில் மேபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினரின் முன்னேற்றம், தொழில்சார்ந்த விவாதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.



இது குறித்து, லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி பேசுகையில்; இந்திய பொருளாதரத்தில் சிறு, நடுத்தர பொருளாதரத்தில், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதை புரிந்து கொண்டுள்ளோம். இந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவருவதிலும், நிலையான லாபத்தை ஈடுபடுவதிலும், வருவாயை அதிகரிப்பதிலும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. இக்கண்காட்சியால் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிக்கும், பொதுமக்களுக்கும் என இருதரபினருக்கும் பயனுள்ளதாக அமையும். இன்னும் பல்வேறு இடங்களில் இது போன்ற கண்காட்சியை நடத்த வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.    



மேலும், வாடிக்கையாளர்களின் அரங்குகளுடன், வங்கியின் பிற சேவைகளான ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, உடல் நலத்துக்கான மருத்துவ காப்பீடு மற்றும் வங்கியின் சேவைகள் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. சில தொழில் நிறுவனகளுக்கு மட்டுமின்றி, பிற வகையிலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மகிழ்வோடு கண்காட்சியை கண்டு களிக்க, பொழுதுபோக்கு நிகழ்சிகளுடன் அறுசுவை உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...