தமிழிசை மீது கோவை காவல் ஆணையாளரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவதூறாக பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.



அந்த புகார் மனுவில்  மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த  தமிழிசை சவுந்திரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், கட்சி அலுவலக இடத்தை திருமாவளவன் மிரட்டி வாங்கியதாக தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாகவும், எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறாக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள்  அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, தமிழிசை சவுந்திரராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் தனது கருத்தை திரும்ப பெறவில்லை எனில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...