ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் மற்றும் நியூயார்க்கின் கண்காடியா கல்விக் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் துவக்கம்


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தைச் சார்ந்த ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் கண்காடியா கல்லூரியிடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.



ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி மற்றும் கண்காடியா கல்லூரியின் நிர்வாகத் துணைத் தலைவர் முனைவர் ஜேம்ஸ் கிரிஸ்டியன் பர்க்கி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை பயிலும் மாணவர்கள் முதல் இரண்டு வருடங்களை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று மீதமுள்ள ஒரு வருடத்தினை அமெரிக்காவில் உள்ள கண்காடியா கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்று பயில்வார்கள்.

முழுமையான வருடங்களை முடித்த பின்னர் இம்மாணவர்கள் மேலும் ஒரு வருடம் அமெரிக்காவில் இதே கல்லூரியில் முதுகலை மேலாண்மை பட்டத்தினை பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு புதுமையான முறையில் கல்விகள் வழங்கப்பட உள்ளது.



இந்நிகழ்ச்சியில், இக்கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...