கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் வாணவராயர் அறக்கட்டளையின் சார்பில் கொங்குநாடு கால்நடை திருவிழா


வாணவராயர் அறக்கட்டளை, சங்கர் வானவராயர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் கலை, பாரம்பரியம், கட்டமைப்புகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து, பராமரித்து, பறைசாற்றும் அறப் பணிக்கானது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண்மை மற்றும் கால்நடை வளங்களை ஊக்குவிக்கவும் கொண்டாடவும், ‘கொங்குநாடு கால்நடை திருவிழாவை’ இவ்வறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 

பண்டை காலம் முதலே நமது வாழ்வின் ஓர் அங்கமாக வீட்டு விலங்குகள் இருந்துள்ளன. அதிலும், குறிப்பாக கால்நடை செல்வங்களின் பங்கு முக்கியமானது. 

தற்போது நம் மண்ணின் கால்நடை செல்வங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவ்வாறான  கால்நடைகளின் கலாச்சார பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பதோடு நில்லாது இவ்வளம் குன்றாதிருக்க விஞ்ஞான ரீதியான அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்த கொங்குநாடு கால்நடை திருவிழாவின் நோக்கமாகும்.



இவ்வருடம் தொடர்ந்து 3 வது முறையாக, சமத்தூர், பொள்ளாச்சியில், 2017 பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இவ்விழாவில் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் 1300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்க உள்ளன. 

வேளாண்மை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான கண்காட்சியும், ஆடு, மாடு, குதிரைகளின் அழகு போட்டியும், இதர கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்த விழாவை காண 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்விழா 108 கோமாதா பூஜையுடன் தொடங்கவிருக்கின்றது. இவ்விழாவுக்கான பதிவு வரும் சனிக்கிழமை பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவ்வாண்டு கால்நடைக்கான போட்டிகளில் நாய் இனமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...