உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.
கோவை: இந்தியா முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மையான மொழியாக்க முயன்றுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய மாணவர் சங்கத்தினர் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மை மொழியாக ஆக்கியுள்ளனர். இதனால் பிற மாநில மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் உள்ளது.
அனைத்து மொழியையும் ஒரே சமமாக பார்க்க வேண்டும். இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்கிறோம், அதே போல உயர் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மாணவர் சங்கத்தினர் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மை மொழியாக ஆக்கியுள்ளனர். இதனால் பிற மாநில மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் உள்ளது.
அனைத்து மொழியையும் ஒரே சமமாக பார்க்க வேண்டும். இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்கிறோம், அதே போல உயர் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.