வாளையாறு அருகே யானைக் கூட்டம் மீது ரயில் மோதி விபத்து: காயமடைந்த மேலும் ஒரு பெண் யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு...!

கோவை வாளையாறு அருகே விரைவு ரயில் மோதிய விபத்தில் ஒரு பெண் யானை அதே விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் யானை, நடுப்பதி அருகே உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதால், இறப்பின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.



கோவை: கடந்த 14 ஆம் தேதி, தமிழக – கேரளா எல்லையான வாளையாறு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை கூட்டத்தின் மீது கன்னியாக்குமரி – அசாம் விரைவு ரயில் மோதிய விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது.

மேலும் சில யானைகள் காயமடைத்திருக்கலாம் என ரயில் ஓட்டுநர் கூறிய நிலையில், கேரள வனத்துறையினர் காயமடைந்த யானைகளை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், வாளையாறு அருகே விபத்து நடந்த சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நடுப்பதி என்ற வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனத்துறைனர் அங்கு சென்று பார்த்த போது யானையின் கால்களில் பலத்த காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் மோதியதில், காயமடைந்த யானை சிறிது தூரம் வந்து உயிரிழந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதே பகுதியில் இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அதே பகுதியில் யானை அடக்கம் செய்யப்பட்டது.

ரயில் மோதிய சம்பவத்தில், மேலும் ஒரு குட்டி யானைக்கு அடிபட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், அந்த யானையை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, கேரள வனத்துறையினர் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, விபத்து நடந்த பகுதி தமிழக - கேரள எல்லையில் இருப்பதால், அடிப்பட்ட அந்த குட்டி யானை தமிழக எல்லைக்குள் வந்திருக்கலாம் என்பதால், தமிழக வனத்துறையினரும் அந்த யானையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...