தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை.

தீபாவளி முடிந்து மறுநாள் புறப்படும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், தீபாவளிக்கு மறுநாளான அக்.25ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்ககோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் இந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.

இக்கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து வெளியூருக்கும் வெளியூரிலிருந்து சென்னைக்கும் பல தரப்பு மக்கள் பயணம் செய்ய உள்ளனர்.

கூட்ட நெரிசல் இன்றி எளிமையாகவும் இனிமையாகவும் பயணம் செய்ய பல்வேறு சிறப்பு பேருந்துகளை தங்களின் வழிகாட்டுதல்படி போக்குவரத்துத்துறை அறிவித்தமைக்கு நன்றி.

இந்த வேளையில் கொண்டாட்டம் முடித்து மீண்டும் அவரவர் இருப்பிடங்களுக்கு ஒரு சேர அனைவரும் திரும்பும் பொழுது மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தீபாவளி தினத்திற்கு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பின்னொரு நாளில் ஈடுசெய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது விடுமுறையாக அறிவித்து உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...