வாணவராயர் அறக்கட்டளையின் சார்பில் விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண்மை மற்றும் கால்நடை வளங்களை ஊக்குவிக்கும் வகையில் 'கொங்குநாடு கால்நடை திருவிழா' பொள்ளாச்சியில் துவக்கம்.

இவ்விழாவின் நோக்கம் தற்போது நம் மண்ணின் கால்நடை செல்வங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவ்வாறான கால்நடைகளின் கலாச்சார பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பதோடு நில்லாது இவ்வளம் குன்றாதிருக்க விஞ்ஞான ரீதியான அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.

இவ்வருடம் தொடர்ந்து 3 வது முறையாக பொள்ளாச்சி சமத்தூரில் இன்று துவங்கிய இவ்விழாவில் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் 1300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 108 கோமாதாக்களை கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

மேலும், இதில் வேளாண்மை மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான கண்காட்சியும், ஆடு, மாடு, குதிரைகளின் அழகு போட்டியும், இதர கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, கொங்குநாடு கால்நடை திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கால்நடைகளுக்கான தீவனம், விவசாயப் பொருட்கள், கால்நடைகளுக்கு என சிறப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
