கோவை காவலர் பள்ளி வளாகத்தில் பாரா சைலிங்கில் பறந்த டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையாளர் சிலம்பரசன்

காவலர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பறந்தனர்.



கோவை: கோவை காவலர் பள்ளி வளாகத்தில், தேசிய மாணவர் படை சார்பில் பள்ளி, கல்லூரி என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் என்.சி.சி மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி வழங்கப்பட்டது.



இதற்காக தகுந்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் தயார் செய்த போது, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பாரா சைலிங்கில் பறந்து அசத்தினார்.



இந்நிலையில் இன்று என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி துவங்கிய நிலையில் அங்கு வந்த கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, மற்றும் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பங்கேற்றனர்.



முன்னதாக அவர்களுக்கு பாரா சைலிங் குறித்தான விதிமுறை மற்றும் எவ்வாறு கீழே இறங்க வேண்டும் என்ற வழிமுறைகள் கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் பாரா சைலிங்கில் பறந்தனர். அதனை தொடர்ந்து என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...