கோவை பச்சாபாளையத்தில் சிறுதுளி சார்பில் சாந்தி பனை வனம் மற்றும் பனையகம் துவங்கும் நிகழ்வு நடைபெற்றது

கோவை பச்சாபாளையத்தில் பனை மரத்தின் நற்பண்புகளைப் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுதுளி சார்பில் நடைபெற்ற பனையகம் துவங்கும் நிகழ்வில் செட்டிபாளையம் ஊராட்சித் தலைவருக்கு ”துளி பசுமை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: பனை மரம் சங்க காலத்திலிருந்தே நமது பண்பாட்டின் ஒரு அங்கமாகவும், தமிழ்நாட்டின் மாநில மரமாகவும் உள்ளது. இந்த மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயனுள்ளது. இப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் தருகிறது. பனை மரத்தின் நற்பண்புகளைப் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுதுளி அமைப்பு சார்பில் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில், லட்சுமிபுரம் பச்சபாளையத்தில் 'சாந்தி பனை வனம்' மற்றும் 'பனையகம்' ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியை சிறுதுளி முன்னெடுத்துள்ளது.

1.7 ஏக்கர் நிலத்தில், அழகிய நடைபாதையால் சூழப்பட்ட ஒரு பகுதியில் 185 பனை மரங்கள் நடப்பட்டன. மீதமுள்ள ஒரு ஏக்கரில் மியாவாக்கி பாணியில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

சாந்தி பனை வனத்தில் பனை மற்றும் பனை உற்பத்திகளின் சிறப்பையும் பனை சாகுபடியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "பனையகம்" என்ற வள மையம் மற்றும் மாநாட்டு மண்டபம் உள்ளது.

இந்த மையத்தில் பனை பற்றிய விவரங்கள், பனையின் பயன்கள், பனை பயிரிடுதல் மற்றும் வளர்ப்பதற்கான வழிகள் மற்றும் பனை சார்ந்த பொருட்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவல் மையத்தை விவசாயிகள் பட்டறைகளை நடத்தவும்,

மேலும் பனை வளர்ப்பு மற்றும் அவர்களின் தயாரிப்புகளை மேம்படுத்தவும் இடத்தைப் பயன்படுத்தலாம். பனை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அழகிய வள மைய கட்டிடத்தை உருவாக்கிய கட்டிட கலைஞர்களான திரு.சிபி மற்றும் திருமதி உதயா ஆகியோரை சிறுதுளி குழுவினர் பாராட்டினர்.

இந்த “பனையகம்” கலாநிதி பி கே கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்களால் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூர் செட்டிபாளையம் மக்கள் சார்பில் பிரசாத், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் சார்பில் ஏ.வி.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில் ஊராட்சி பங்குதாரர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சிறுதுளி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேரூர் செட்டிபாளையம் ஊராட்சித் தலைவரும், பசுமைப் பஞ்சாயத்தின் தீவிர ஆர்வலருமான என்.பி. சாந்தி பிரசாத், தனது பஞ்சாயத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டதை சிறப்பிக்கும் விதமாக “சிறுதுளி பசுமை விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமதி வனிதா மோகன் கூறுகையில், பனையைப் பற்றி அறிந்து கொள்வதில் பொதுமக்கள் காட்டும் அன்பும் ஆர்வமும் அளப்பரியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தன்னார்வத் தொண்டு செய்து மரக்கன்றுகளை நடுவதற்கு உதவிய அண்ணா பல்கலைக்கழக பசுமைப் போராளிகளுக்கும், கோயம்புத்தூர் குடியிருப்போர் சங்கம் (RAAC) மற்றும் நிதியுதவி அளித்த சாந்தி கியர்ஸ் மற்றும் எக்ஸ்பிலியோ சொல்யூஷன்ஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது. தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...