கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர். மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஒரே நாளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs) இணைந்து 07.07.2026 அன்று செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கான சிறப்பு வெறிநோய் (Anti-Rabies Vaccination-ARV) தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.



மாநகராட்சி சார்பில் நேற்று ஒரே நாளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் ஒருங்கிணைந்து மனிதாபிமான முறையில் தெருநாய்களைப் பிடித்து, தடுப்பூசி செலுத்திய பின்னர், அவை பிடிக்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் விடுவித்தனர்.

தெருநாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய வெறிநோயை தடுப்பதற்காக, மாநகரம் முழுவதும் விரிவான தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.

மேலும், பொதுமக்கள் மற்றும் தெருநாய்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல், மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனிதர்களும் விலங்குகளும் தொடர்ந்து பாதுகாப்பாக வாழ்ந்திடவும், வெறிநோய் இல்லாத கோவையை உருவாக்கிடவும் இப்பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...