நீலகிரி அருகே குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 6 காட்டுயானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள் குன்னூர் - மேட்டுபாளையம் செல்லும் சாலையின் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே முகாமிட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.



நீலகிரி: நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் வெளியேறி சாலைகளில் சுற்றித்திரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. மேலும் அவ்வப்போது, வாகனங்களை தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த யானைகள் சாலையோரம் உள்ள அடர்ந்த சோலைகளில் உள்ள பழங்களையம், தாவரங்களையும், மூங்கில்களையும் உண்டு வருகின்றன, இவை குன்னூர் மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்து விடாமல் வனத்துறையினர் தாெடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இருப்பினும் இந்த யானைகள் எந்த நேரத்திலும் சோலைப் பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வரும் சூழல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



மேலும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரும் யானைகளையும் வாகன போக்குவரத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...