திருப்பூரில் கிரிண்டர் (Grindr) எனும் செல்போன் செயலி மூலம் ரூ.90,000 வழிப்பறி; மூவர் கைது

திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிரிண்டர் செயலி மூலம் ஒருவரை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட மூன்று பேரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் அவர்களது செல்போன் எண்ணில் தொடர்பு அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபடும்.சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அம்மாபாளையம் முதல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனில் கிரிண்டர் செயலி மூலம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கார்த்திக் சென்றபோது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...