திருப்பூரில் கிரிண்டர் (Grindr) எனும் செல்போன் செயலி மூலம் ரூ.90,000 வழிப்பறி; மூவர் கைது

திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிரிண்டர் செயலி மூலம் ஒருவரை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட மூன்று பேரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் அவர்களது செல்போன் எண்ணில் தொடர்பு அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபடும்.சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அம்மாபாளையம் முதல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனில் கிரிண்டர் செயலி மூலம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கார்த்திக் சென்றபோது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...