கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எரிந்து நாசமானது. 50,000 ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகள் எரிந்தது. உயிரிழப்பு எதுவும் இல்லை. துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Coimbatore: கோவை மாவட்டம் துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் நேற்று இரவு நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வீடுகளில் வெடித்த எரிவாயு சிலிண்டர்களால் 4 ஓட்டு வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், 50,000 ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் அமைந்துள்ளன. இங்கு தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், அங்கு குடியிருக்கும் நாகராஜ் என்பவரது வீட்டில் சமையல் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மலமல பரவி அருகில் இருந்த மற்ற வீடுகளிலும் பற்றி எரிய தொடங்கியது.
தீ மேலும் வேகமாக பரவியதால், அருகில் இருந்த மற்றொரு வீட்டின் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இரண்டாவது சிலிண்டர் வெடித்ததால் தீயின் தீவிரம் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரம் கடுமையாக போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் நான்கு ஓட்டு வீடுகளும் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சாம்பலானது. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்த வீட்டார் உடனடியாக வெளியில் ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
இந்த தீ விபத்தில் ஒரு வீட்டில் இருந்த 50,000 ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகள் எரிந்து போனதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர வீட்டு உபயோக பொருட்கள், உடைகள், மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தும் தீயில் சேதமடைந்துள்ளன.
இந்த தீ விபத்து தொடர்பாக இது வெறும் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என துடியலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இந்த சம்பவம் எச்சரிக்கையாக உள்ளது.
துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் அமைந்துள்ளன. இங்கு தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், அங்கு குடியிருக்கும் நாகராஜ் என்பவரது வீட்டில் சமையல் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மலமல பரவி அருகில் இருந்த மற்ற வீடுகளிலும் பற்றி எரிய தொடங்கியது.
தீ மேலும் வேகமாக பரவியதால், அருகில் இருந்த மற்றொரு வீட்டின் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இரண்டாவது சிலிண்டர் வெடித்ததால் தீயின் தீவிரம் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரம் கடுமையாக போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் நான்கு ஓட்டு வீடுகளும் முற்றிலுமாக எரிந்து நாசமாயின. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சாம்பலானது. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்த வீட்டார் உடனடியாக வெளியில் ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
இந்த தீ விபத்தில் ஒரு வீட்டில் இருந்த 50,000 ரூபாய் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகள் எரிந்து போனதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர வீட்டு உபயோக பொருட்கள், உடைகள், மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தும் தீயில் சேதமடைந்துள்ளன.
இந்த தீ விபத்து தொடர்பாக இது வெறும் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என துடியலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இந்த சம்பவம் எச்சரிக்கையாக உள்ளது.