கோயமுத்தூர் யெங் இந்தியாவின் சார்பில் கோவையில் நடைபெற்று வரும் கோவை விழாவின் ஒரு பகுதியாக இன்று பிஎஸ்ஜி கல்விக் குழுத்தில் புதையல் வேட்டை என்னும் போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் இயக்கக் கூடியவர்களும் ஏராளமான பெண்களும் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்கள் போட்டியின் தொடக்க புள்ளியாக ஒரு இடத்தில் இருந்து தொடங்கி கிடைக்கப்பெரும் குறிப்புகள் மூலம் இறுதிப் பகுதியை அடைய வேண்டும்.
இதன் துவக்கப் பகுதி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். அங்கிருந்து போட்டியாளர்கள் ஒவ்வொரு குறிப்புகளையும் சேகரித்து அக்கல்லூரியின் அருகில் உள்ள பிஎஸ்ஜி சர்வோஜனா பள்ளியில் நான்காவது குறிப்பை எட்டினர்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் உறுப்பினர்களால் குறிப்புகள் வழங்கப்பட்டு இந்த போட்டியின் பயணமானது நகரம் முழுக்க சென்று நிறைவடைந்தது.
இப்போட்டியின் நிரைவாக இருசக்கர வாகனம் மற்றும் நான்று சக்கர வாகனம் ஓட்டி இலக்கை அடையும் போட்டியில் பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் வென்றனர்.

இதில் சிறப்பாக வாகனம் ஓட்டியதற்காக பெண்கள் அணிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிபெற்றோர்களுககு பிஎஸ்ஜி கல்விக் குழும இயக்குநர் ஆர்.நந்தகோபால் பரிசுகளை வழங்கினார்.