திருப்பூர் பூங்கா சாலையில் விபத்தானவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த 108 ஆம்புலன்ஸால் பரபரப்பு

திருப்பூர் பூங்கா சாலையில் விபத்தில் படுகாயமடைந்த நபரை முதலுதவி சிகிச்சைக்கு அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஏற்க மறுத்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் பூங்கா சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.



அப்போது அந்த வழியாக வந்த 108 வாகனத்தை நிறுத்திய பொதுமக்கள் காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தினர்.



ஆனால் பழுது பார்க்கும் பணிக்காக செல்வதாக கூறி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்து வாகனத்தை எடுத்து புறப்பட்டனர்.

பின்னர் அவர்களை வழிமறித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனால் அந்த 108 ஆம்புலன்ஸ் மீண்டும் திரும்பி வந்து காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

108 ஆம்புலன்ஸ் முதலுதவிக்கு நபரை ஏற்க மறுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...