கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது

கோவை பார்க் பொறியியல் கல்லூரியில் ”விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் பேராசிரியர் S. புவனேஸ்வரி கலந்து சிறப்புரையாற்றினார்.


கோவை: பார்க் பொறியியல் கல்லூரியானது கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கணியூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.

இது இந்தியாவின் ஐந்தாவது சிறந்த பல்கலைக்கழகமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு ஐஎஸ்ஓ 9002 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் விவசாய பொறியியல் துறையின் சார்பாக "விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை 10 Nov 2022 அன்று கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறைக்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் Dr. லக்ஷ்மணன் வரவேற்றார்.

மாணவர்கள் இது போன்ற பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தெரிவித்தார்.



இந்த பயிற்சி பட்டறையின் ஒரு பகுதியாக "தொழில் முனைவு மற்றும் விவசாய மருத்துவம்" என்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக Megha Group of Business நிறுவனர் S. புவனேஸ்வரி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் வருகை பேராசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வேளாண் துறையின் புதிய முயற்சிகள் மற்றும் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.

மதிய வேளையில் கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினர் செல்வகுமார், நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர், Greeno Tech Solutions, கோவை இந்த துறைசார்ந்த ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்கான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.



இந்த கருத்தரங்கில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இறுதியாக தேசிய கீதத்துடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...