கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்களான 2 பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன், இரண்டு குடோன்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
Coimbatore: கோவை: கோவை மாவட்டத்தின் எல்லையோர பகுதியான திருமலையாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள இரண்டு குடோன் வலையமைப்புகளில், மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியா சுமார் 60 முதல் 100 டன் வரை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சனிக்கிழமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டது.
குறிப்பிட்ட இடத்தில் அதிகளவில் யூரியா மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கவனித்த அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த முறைகேடு அம்பலமானது.
பிரதான் மந்திரி பாரதிய ஜன் உர்வராக பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய இந்த யூரியா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அந்த யூரியாவை திரவம் மற்றும் பேஸ்ட் வடிவமாக மாற்றி கேரளாவுக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சோதனையின்போது, சம்பந்தப்பட்ட ஆலைகளில் ரசாயன கழிவுநீர் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக நிலத்தில் வெளியேற்றப்பட்டதும் கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி, அனுமதியின்றி செயல்பட்டதற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (ETP) அமைக்காததற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதையடுத்து, வேளாண்மைத் துறையினர் இரண்டு குடோன்களுக்கும் சீல் வைத்தனர். மேலும், மானிய விலை யூரியா இவ்வளவு பெரிய அளவில் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட இரண்டு ஆலைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட ஏழு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசு மானிய விலை உரங்களின் சேமிப்பு, கையாளுதல் மற்றும் உரிமம் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காகவும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவற்றை ஓட்டி வந்த இரண்டு ஓட்டுநர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சட்டவிரோத யூரியா பதுக்கல் மற்றும் சுற்றுச்சூழல் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பிற ஆலைகளிலும் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இடத்தில் அதிகளவில் யூரியா மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கவனித்த அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த முறைகேடு அம்பலமானது.
பிரதான் மந்திரி பாரதிய ஜன் உர்வராக பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய இந்த யூரியா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அந்த யூரியாவை திரவம் மற்றும் பேஸ்ட் வடிவமாக மாற்றி கேரளாவுக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சோதனையின்போது, சம்பந்தப்பட்ட ஆலைகளில் ரசாயன கழிவுநீர் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக நிலத்தில் வெளியேற்றப்பட்டதும் கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி, அனுமதியின்றி செயல்பட்டதற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (ETP) அமைக்காததற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதையடுத்து, வேளாண்மைத் துறையினர் இரண்டு குடோன்களுக்கும் சீல் வைத்தனர். மேலும், மானிய விலை யூரியா இவ்வளவு பெரிய அளவில் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட இரண்டு ஆலைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட ஏழு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசு மானிய விலை உரங்களின் சேமிப்பு, கையாளுதல் மற்றும் உரிமம் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காகவும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவற்றை ஓட்டி வந்த இரண்டு ஓட்டுநர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சட்டவிரோத யூரியா பதுக்கல் மற்றும் சுற்றுச்சூழல் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பிற ஆலைகளிலும் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.