கோவையில் கனமழை - மழைநீர் வடிகால், கால்வாய் தூய்மை பணியால் தரைப்பாலங்களில் நீர் தேங்குவது தவிர்ப்பு

கோவையில் இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களில் மாநகராட்சியின் தூய்மை பணி காரணமாக லங்கா கார்னர் உள்ளிட்ட முக்கிய தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது. He ruled.


கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு முழுவதும் தொடர் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் கோவை மாநகரில் முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யும் போது கோவை லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலம் மற்றும் கிக்கானிக் தரைப்பாலம் முழுமையாக நீர் தேங்கி அந்த சாலைகளில் போக்குவரத்து முடங்கும் சூழல் ஏற்படும். பின்னர் ராட்சத மோட்டர்கள் மூலம் நீண்ட நேரம் நீர் வெளியேற்றப்பட்டு சாலைகள் மீண்டும் திறந்து விடப்படும்.



ஆனால் அந்த கால்வாய்கள், மழை நீர் வடிகால் தூய்மை செய்யப்பட்ட நிலையில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் இந்த தரைப்பாலங்களில் நீர் தேங்காமல் வெளியேறியது.



இதனால் எந்த பாதிப்பும் இன்றி அந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...