கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உடனடியாக மின் மயானம் அமைக்க வேண்டும் - ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைக்கப்பட உள்ள மின் மயானத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.



இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த மின் மயானத்தை உடனடியாக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைக்க வலியுறுத்தி ஒத்தக்கால் மண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பிரிமியர் மில்ஸ் மற்றும் ஒக்கிலிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.



மனு அளிக்க வந்த மக்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு முழக்கங்களையும் எழுப்பினர்.



இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள் அப்பகுதியில் மின் மயானம் வேண்டும் என்பது தங்களது பல நாள் கோரிக்கைகளாக உள்ளது. தற்போது இதனை உடனடியாக அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மின் மயானம் அமைய உள்ள அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள மக்கள் அந்த இடத்தில் மயானம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...