கூடலூரில் நீரோடை அகலப்படுத்துவதில் இருதரப்பினரிடையே மோதல் - அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பிறகு பணிகள் நடைபெற்றன

கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார்கள் வரவழைக்கபட்டு பேச்சுவார்த்தைக்கு பின்னரே நீரோடை அகலப்படுத்தும் பணியானது நடைபெற்றது.



கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிக்கபட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளில் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் திண்டாடுவது வழக்கமாக உள்ளது.

இதனை சரி செய்ய அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோடையை அகலப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்தது.



அதற்கான பணிகளை தொடங்கி மாவட்ட நிர்வாகம் நில அளவையில் செயல்பட்ட போது நீரோடையை ஒட்டி உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதி முழுக்க பெரும் பரபரப்பு நீடித்தது.



இச்சம்பவத்தை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் நீரோடையை அகலப்படுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தியது.



பின்னர் இதனை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் வரவழைக்கபட்டதுடன் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் நீரோடை பகுதியில் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.



பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் பிரச்சனைக்குரிய பகுதியில் நில அளவை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆற்றின் இரு புறங்களிலும் நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...