நீலகிரி கூடலூர் அருகே உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தை - வாகன ஓட்டிகள் அச்சம்

கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டதும் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பரவி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. இந்நிலையில் பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று வாகனத்தை கண்டவுடன் சாலையைக் கடந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்கு சென்றது.



இதனால் வனப்பகுதியை ஒட்டிய தேயிலை தோட்டங்களில்அடிக்கடி நடமாடும் சிறுத்தையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...