கோத்தகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர மண் திட்டில் மோதி பயங்கர விபத்து - 20 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூருக்கு சென்ற அரசு பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மண் திட்டில் மோதிய விபத்தில், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து இன்று காலை குன்னூருக்கு அரசு பேருந்து ஒன்றி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது.



இந்நிலையில், பேருந்து கோத்தகிரியில் உள்ள கே.பி.எஸ் கல்லூரி அருகே சென்ற போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியவாறு சாலை ஓரத்தில் உள்ள மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கில் வந்த மகேந்திரன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்த ஒட்டுநர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மருத்துவர்கள் நிலையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே பேருந்தை இயக்கிய ஒட்டுநர் ரகுராதன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் குறித்து கோத்தகிரி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காலாவதியான அரசு பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...