மதுக்கரை அருகே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

மதுக்கரையில் திருமணமான 11 நாட்களிலே புது மணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: மதுக்கரை முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த மனோஜ் குமார் என்பவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மர் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டினா ஏஞ்சல் (25) என்பவருக்கும் கடந்த 11 நாட்களுக்கு முன்பு திருமணமானது.

திருமணம் முடிந்து முத்துமாரி மதுக்கரையில் உள்ள தனது கணவர் மனோஜ் குமார் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தற்போது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமான 11 நாளில் புதுமண பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...