குன்னூரில் தனியார் பங்களாவிற்குள் நுழைந்து மேஜை நாற்காளிகளை சேதப்படுத்திய காட்டு மாடு- பொதுமக்கள் அச்சம்

குன்னூரில் உள்ள தனியார் பங்களாவிற்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்து அங்கிருந்த மேஜை நாற்காளிகளை காட்டு மாடு சேதப்படுத்திய நிலையில், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: குன்னூரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் யானை, கரடி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் நகரப் பகுதியில் சுற்றி வரும் காட்டு மாடுகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.



இந்நிலையில் குன்னூர் கிளப்ரோடு பகுதியில் உள்ள தனியார் பங்களாவிற்குள் நுழைந்த காட்டுமாடு அங்கு வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த டேபிள், சேர்கள், டீ ப்பாய்களை ஆக்ரோஷத்துடன் சேதப்படுத்தி விட்டு சென்றது.



வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது தங்களை அச்சுறுத்தி வரும் காட்டுமாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...