கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் திறக்கப்படும் - ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் தகவல்

கோவை ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட குளிசாதன அறையை திறக்க வந்த ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் செயலி மூலம் ஆட்டோ புக் செய்யும் பயணிகளுக்கு வசதியாக ரயில் நிலையத்தின் பின்புறம் அனுமதி வழங்க சிறப்பு மையம் திறக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக ரெயில்வேக்கு அதிகமான வருவாயை ஈட்டி தருவது கோவை இரயில் நிலையமாகும். கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் புதிய நவீன குளிர்சாதன காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 என்ற கட்டணத்தை செலுத்தி பயணிகள் காத்திருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.



இந்த நவீன குளிர்சாதன அறையை கோவை ரயல்வே முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



இது குறித்து முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறும் போது:

பயணிகள் வசதிக்காக கட்டண முறையில் குளிர்சாதன அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் அதிக பயணிகள் வருவதால் முதல் நடைமேடையில் இந்த அறை ரூ.12 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் பக்தர்கள் வசதிக்காக இந்த அறையை பயன்படுத்தி கொள்வார்கள். நவீன முறையில் அமைந்துள்ள அறையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.



மேலும் கோவை ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளுக்கு நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் உள்ளது. பார்க்கிங் வசதி இல்லாததால் ரயில் நிலையத்தின் பின்புறம் செயலி மூலம் ஆட்டோ புக் செய்ய வசதி ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...