கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வன திருவிழாவில் 2022 மரக்கன்றுகள் நடப்பட்டன

கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வனத்திருவிழாவில் வனத்திறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்றார் . மேலும், வனத்திருவிழாவை சிறப்பிக்கு வகையில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளத்தைக் காக்கும் வகையில் நாக்குபெட்டா அமைப்பின் சார்பில் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். நாக்குபெட்டா அமைப்பின் நிறுவனர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஜெயபிரகாஷ் பெள்ளி, இந்திய நிலக்கரி கழக இயக்குநர் மற்றும் இந்திய தேயிலை வாரிய உறுப்பினருமான ராஜேஷ் சந்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கக்குச்சி கிராமப் பகுதிகள் மற்றும் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 2022 சோலை மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.



இப்பேரணியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இறுதியாக படுகர் இன மக்கள் ஒன்றாககூடி தங்களது கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். இதில் கிராம மக்கள், அரசுத் துறை அலுவலர்கள், நாக்குபெட்டா அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...