கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் தற்காலிகமாக கொச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: இன்று மாலை கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் கிளைகள் சாய்ந்து விழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை நோக்கி வந்த சில விமானங்கள் தற்காலிகமாக கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு பணிக்காக சிஐஎஸ்எஃப் வீரர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இரவு 9.30 மணிக்குப் பிறகு நிலைமை சீரடையும் என்றும், அதன் பின்னர் கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...