திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்கள் - காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புதிய கட்டடங்களை சென்னையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம்,பூ மார்க்கெட், தென்னம்பாளையம் வாரச்சந்தை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து 75.43 ரூபாய் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டிய பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பூ சந்தை மற்றும் தென்னம்பாளையம் சந்தை ஆகிய கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூரில் நடைபெற்ற கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினீத், மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...