கோவை விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்-4 பேர் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேரை கைது செய்த அதிகாரிகள், 6.5 கோடி ரூபாய் மதப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மறைத்து கொண்டு வரப்படும் தங்க கட்டிகள் சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் அண்மை காலமாக அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 18 பயணிகளின் உடமைகளை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார், கடலூரை சேர்ந்த சங்கர், பரமகுடியை சேர்ந்த ராம்பிரபு, மற்றும் சேலத்தை சேர்ந்த குமாரவேல் ஆகிய நான்கு பேரும் தாங்கள் அணிந்திருந்த உடைகளில் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்ததது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...