பல்லடத்தில் கைது செய்ய சென்ற உதவி ஆய்வாளரின் கையை கடித்த குற்றவாளியால் பரபரப்பு

பல்லடம் அறிவொளி நகரில் கைது செய்ய சென்ற இடத்தில் குற்றவாளி கடித்ததால் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வருபவர் பாபா பஹ்ரூதீன். இவருக்குமனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாபா பஹ்ரூதீனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மனைவி வேலை செய்யும் பனியன் நிறுவனத்திற்க்கு சென்ற பஹ்ரூதீன் தனது மனைவிக்கு எப்படி வேலை கொடுக்கலாம் என கூறி மேலாளர் சஞ்சய் குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பனியன் நிறுவன மேலாளர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற பல்லடம் போலீசார் பாபா பஹ்ரூதீன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில்பாபா பஹ்ரூதீன் பல்லடத்தை அடுத்தஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்பணியாற்றும்அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்ததகவலையடுத்துபோலீசார் சம்பவ இடத்திற்குசென்றனர்.



அப்போது ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தின் கதவை அடைத்துக் கொண்டு பஹ்ரூதீன் அரை நிர்வாணமாக இருந்துள்ளார். இதனை அடுத்துஉதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கைது நடவடிக்கையில் ஈடுபடும் போதுயாரும் எதிர்பாரத விதமாக பாபா பஹ்ரூதீன் உதவி ஆய்வாளர் கையை பிடித்து கடித்துள்ளார்.

இதனால் உதவி ஆய்வாளர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பஹ்ரூதீனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.குற்றவாளி பஹ்ரூதீன் கடித்ததால் பலத்த காயமடைந்தஉதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...