கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் முறைகேடு - முன்னாள் காவலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

புலியகுளம் விநாயகர் கோவிலில் பூஜை பொருட்கள், பால், அர்ச்சனை சீட்டு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாகவும், கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் வெளிப்படையாக பணம் வாங்குவதாகவும் முன்னாள் காவலாளி குமரேசன் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக புலியகுளம் விநாயகர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில்காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் குமரேசன்.



இந்நிலையில் அவர் புலியகுளம் விநாயகர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவிலில் பூஜை பொருட்கள் வாங்குவது, பால் அபிஷேசகத்திற்காக பால் வாங்குவது, அர்ச்சனை சீட்டு வழங்குவது, போன்றவற்றில் முறைகேடு நடக்கிறது.

கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் வெளிப்படையாக பணம் வாங்குகின்றனர். விஐபிக்களுக்கு மட்டும் தீபாராதனை காட்டப்படுகிறது. இதனை கோவில் தலைவர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்.

இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...