அவிநாசி-அத்திகடவு திட்டத்தை முடக்க சிட்கோ தொழில்பேட்டையை அமைக்கும் திமுக அரசு - எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு

தொழிற்பேட்டை அமைக்க அன்னூர் பகுதியில் விளை நிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்.பி வேலுமணி, இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறினார்.


கோவை: அன்னூர் பகுதியில் 3 ஆயிரத்து 731 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. அதற்கான அரசானையை தமிழக அரசு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக அன்னூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் கோவையை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார்,அமுல் கந்தசாமி, தனபால் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து அதிமுகவின் ஆதரவை தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.பி வேலுமணி பேசியதாவது:



விவசாயிகளின் 60 ஆண்டுகள் கனவு திட்டமான அவிநாசி-அத்திகடவு திட்டப்பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சிட்கோ தொழில்பேட்டையை திட்டமிட்டே தமிழக அரசு கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க அதிமுக ஒரு போதும் அனுமதிக்காது என கூறிய அவர் அதற்காக விவசாயிகளுக்கு அதிமுக தோல்கொடுத்து போராடும் என்றும் உறுதிபட தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் எஸ்.பி வேலுமணி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...