கோவையில் 19 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.இராஜா வழங்கினார்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10 இலட்சம் மானியம், 3 பயனாளிகளுக்கு வாகனங்கள் வாங்க ரூ. 5.05 இலட்சம் மானியம் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறைகளின் தணிக்கைப் பத்திகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவரும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.இராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், அருண்மொழிதேவன், கிருஷ்ணசாமி, A.K.செல்வராஜ், R.D.சேகர், தமிழரசி, SS.பாலாஜி, முன்னிலை வகித்தனர்.



பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.இராஜா வழங்கினார்.

அதன்படி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் வருவாய்த்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.5.74 இலட்சம் மானியம் வழங்கப்பட்டது.

4 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10 இலட்சம் மானியம், 3 பயனாளிகளுக்கு வாகனங்கள் வாங்க ரூ. 5.05 இலட்சம் மானியம் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர், எஸ்.ஆர்.இராஜா வழங்கினார்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், சட்டப்பேரவை செயலர் முனைவர் கே.சீனிவாசன், இணைச் செயலாளர் சிமன்பாண்டியன், செயல் இயக்குணர் (சிப்காட்) டைடல் பார்க் மேலாண் இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்று காலை சுங்கம் போக்குவரத்து பணிமனை, சிட்கோ, பீளமேடு தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர், எஸ்.ஆர்.இராஜா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...