அருந்ததியர் சமூக மக்களின் இலவச வீட்டு மனை கோரிக்கை - முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என இருகூர் பேரூராட்சி தலைவர் உறுதி

சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரனிடம் ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூகத்தினர் மனு அளித்த நிலையில், முதலமைச்சர் மற்றும் பொறுப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராவத்தூர் பகுதி அருந்ததியர் சமூக மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், கோட்டை முதல் கொத்தளம் வரை மனுக்கள் கொடுத்தும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதாக இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரனிடம் மனு அளித்தனர்.

அப்போது, இருகூர் பேருராட்சி தலைவர் ஆ.சந்திரன் முதலமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அருந்ததியர் சமூக மக்களின் 10 ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.



இந்த நிகழ்வின் போது, மன்ற உறுப்பினர் நதியா ரவிச்சந்திரன் மற்றும் மக்கள் வழிகாட்டி இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மயில்சாமி, மற்றும் கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...