நீலகிரி உதகை - மசினகுடி நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த மக்னா யானை - வாகன ஓட்டிகள் அச்சம்..!

மக்னா யானை வழிமறித்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திய நிலையில், சுமார் அரை மணி நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் போக்குவரத்து சீரானது.



நீலகிரி: உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக ஊட்டிக்கு தான் வந்து செல்ல வேண்டும்.

அதற்காக அவர்கள் மசினகுடி - மாவனல்லா - கல்லட்டி மலைப்பாதையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த சுற்றுலா பயணிகளும் இந்த சாலை வழியாக தான் உதகைக்கு வருகின்றனர்.

சுமார் 30 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் அடிக்கடி காட்டு யானைகள் சாலை ஓரத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது.



இந்த நிலையில் நேற்று மாலை மக்னா யானை என்று அழைக்கக்கூடிய தந்தம் இல்லாத ஆண் யானை ஒன்று பொக்காபுரம் சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்களை வழிமறித்து நின்றது.



இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர்.



இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்நிலையில், மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதை எடுத்து போக்குவரத்து சீரானது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...