கோவையில் கொடி நாள் நன்கொடை வழங்கும் நிகழ்வு - நன்கொடை வழங்கி தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சமீரன்

முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 'படைவீரர் கொடிநாள்' இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற கொடி நாள் நன்கொடை வழங்கும் நிகழ்வை ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



கோவை: இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி "படைவீரர் கொடி நாள்" கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறை கடந்த 1949-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் கொடி நாள் நன்கொடை வசூலிக்கப்படும்.

இதன் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும், படை வீரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்காகவும், பணியின் போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறு வாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.



அதன்படி கோவையில் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு கொடி நாள் நன்கொடை பெறப்படுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார்.



முன்னதாக தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நன்கொடை வழங்கியதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கு வந்திருந்த பொதுமக்கள் பலரும் நன்கொடைகளை வழங்கினர்.

இந்த நன்கொடை வசூலை முன்னாள் ராணுவப் படையினர் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...