கோவையில் போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

பீளமேடு அருகேயுள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் அபுமோகராஜ் (34). இவர் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த பணியின் காரணமாக அவர் ஆனைகட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் ஸ்டூடியோவில் வேலை செய்து வரும் ஸ்டிபன்ராஜ், கடையை கவனித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம் போல ஸ்டிபன்ராஜ் ஸ்டூடியோவில் வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை ஸ்டுடியோவை திறப்பதற்காக சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அபுமோகராஜூக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே கோவை திரும்பினார்.

பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன், அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து அபுமோகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த போட்டோ ஸ்டுடியோ அருகே சுற்றித்திரிந்த கார்கள் குறித்தும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...