கோவையில் போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

பீளமேடு அருகேயுள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் அபுமோகராஜ் (34). இவர் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த பணியின் காரணமாக அவர் ஆனைகட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் ஸ்டூடியோவில் வேலை செய்து வரும் ஸ்டிபன்ராஜ், கடையை கவனித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம் போல ஸ்டிபன்ராஜ் ஸ்டூடியோவில் வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை ஸ்டுடியோவை திறப்பதற்காக சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அபுமோகராஜூக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே கோவை திரும்பினார்.

பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன், அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து அபுமோகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த போட்டோ ஸ்டுடியோ அருகே சுற்றித்திரிந்த கார்கள் குறித்தும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...