கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 24 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. வேந்தர் Dr கு. இராமசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr N. பஞ்சநதம் சிறப்புரை ஆற்றினார்.


Coimbatore: கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் பிரிவு மாணவர்களுக்கான 18-வது பட்டமளிப்பு விழா நேற்று (11.07.2026) நடைபெற்றது. இவ்விழாவில் மொத்தம் 2146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.






கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr கு. இராமசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr இராச. வசந்தகுமார், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் Dr சு. இரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr N. பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழாவில் பேருரை நிகழ்த்தினார். மாணவர்களின் உயர்கல்வியும், ஆராய்ச்சியும், சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




பொதுநல சிந்தனையும், தியாக உணர்வும் உலகில் அன்பையும், அமைதியையும் நிலைக்கச் செய்ய வேண்டும். தனிமனித தேவைகள் குறைந்து, உணவு, கல்வி, மருத்துவம் முதலான அடிப்படை தேவைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதற்கு மாணவர்கள் உறுதியேற்க வேண்டும் என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.




இந்த விழாவில், 18 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 24 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. மொத்தம் 2146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பதிவாளர் Dr பீ.வீ. பிரதீப், தேர்வாணையர் Dr ப. பழனிவேலு மற்றும் Dr வீ. இராகவி உள்ளிட்ட முதன்மையர்களும், துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...